பார்டர் கவாஸ்கர் டிராபிக்காக ஆஸ்திரேலிய அணி இந்தியா வந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
IND vs AUS:
ஆஸ்திரேலிய அணியானது, 4 டெஸ்ட் போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டிராபியை விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இந்த டிராபி, வரும் 9ம் தேதி தொடங்கி மார்ச் மாதம் 13ம் தேதி வரை நடைபெற உள்ளது. இதன் முதல், டெஸ்ட் போட்டி நாக்பூரில் உள்ள விதர்பா கிரிக்கெட் அசோசியேஷன் மைதானத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இந்த டிராபிக்கு தயாராகும் வகையில், இந்திய அணி முன்கூட்டியே நாக்பூரில் பயிற்சியில் மேற்கொள்ள உள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலிய அணியும், பயிற்சியில் ஈடுபடுவதற்காக இன்றே இந்தியாவை வந்தடைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் அணியில் இடம் பெற்றுள்ள அனைத்து வீரர்களும் இந்தியா வர உள்ள நிலையில், முன்னணி வீரரான உஸ்மான் கவாஜா மட்டும் விமானத்தை தவற விட்டதாக கூறப்படுகிறது.
இந்தியா வருவதற்கான விசா கிடைப்பதில் தாமதமாகி உள்ளதாக, உஸ்மான் கவாஜா தனது டிவீட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இவர், கடந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் சிறந்த டெஸ்ட் வீரராக தேர்வு செய்யப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. விரைவில் இவர், பார்டர் கவாஸ்கர் டிராபி தொடருக்காக இந்தியா வந்தடைவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
Me waiting for my Indian Visa like… #stranded #dontleaveme #standard #anytimenow https://t.co/pCGfagDyC1
— Usman Khawaja (@Uz_Khawaja) February 1, 2023