பொதுமக்களின் எளிய பயணத்திற்காக பயன்படும் பேருந்து சேவைகளில் ஓட்டுனர்களின் அலட்சியத்தால் சில நேரங்களில் விபத்து ஏற்படுகிறது. அதன்படி சென்னை மாநகர போக்குவரத்து கிளை அலுவலகத்தில் பேருந்துக்கு டீசல் போட நடத்துனர் ஓட்டுநர் இருக்கையில் அமர்ந்து பேருந்தை இயக்கியுள்ளார்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
அப்போது யாரும் எதிர்பாராத நேரத்தில் பேருந்து டீசல் பங்கில் மோதி பெரும் சேதத்தை விளைவித்தது. இதுபோன்ற அலட்சிய போக்கு சம்பவம் இனி நடக்காமல் இருக்க போக்குவரத்து கழக மேலாளர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
Dance ஆடி வீடியோ பதிவிட்டால் சிறை தண்டனையா? சிக்கிக்கொண்ட ஜோடிகளால் உஷாரான இன்ஸ்டா பிரியர்கள்!!!
அதில் “எந்த ஒரு சூழ்நிலையிலும் ஓட்டுநரை தவிர மற்றவர்கள் பேருந்தை இயக்க கூடாது. இதை அனைவரும் அறியும் வண்ணம் தகவல் பலகையில் குறிப்பிட வேண்டும். மேலும் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படுவதை தடுக்க கிளை மேலாளர்களின் தொடர் கண்காணிப்பு அவசியம்.” என்றும் கூறியுள்ளார்.