இந்தியா, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் முதல் போட்டி இன்று (ஜனவரி 18) ராஜீவ் காந்தி மைதானத்தில் நடைபெற உள்ளது. இலங்கை அணியுடன் வெற்றி கண்ட இந்திய அணியும், பாகிஸ்தான் அணியுடன் தொடரை கைப்பற்றிய நியூசிலாந்து அணியும் விளையாட உள்ளதால் ரசிகர்கள் ஏகபோக எதிர்பார்ப்பில் உள்ளனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இதையடுத்து தரவரிசை பட்டியலில் முதலிடத்தில் உள்ள நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லதாம் கூறுகையில், “கேன் வில்லியம்சன், டிம் சவுதி போன்ற முக்கிய வீரர்கள் அணியில் இல்லாதது எங்களுக்கு மிகவும் பின்னடைவு. ஆனால் சர்வதேச போட்டிகளில் ஆடிய அனுபவம் நிறைந்த வீரர்கள் உள்ளதால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்வார்கள் என நம்புகிறேன்.
மேலும் இந்தியாவில் உலக கோப்பை போட்டி நடைபெற உள்ளதால் இந்த தொடர்கள் எங்கள் அணி வீரர்களுக்கு சிறந்த அனுபவமாகவே இருக்கும். இந்திய அணியில் விராட் கோலி தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். அவரை கையாள்வது குறித்து பல்வேறு திட்டங்களை வகுத்து வருகிறோம்.” என கூறியுள்ளார்.