சர்ச்சை நாயகியான வனிதா குறித்த முக்கிய செய்தி ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
வனிதா
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் ரசிகர்கள் மத்தியில் இடம் பிடித்தவர் தான் வனிதா. அதற்கு முன்பு அவர் பல பிரச்சனைகளை சந்தித்து சர்ச்சைகளில் சிக்கி இருந்தாலும் அவருக்கு பெயர் கொடுத்தது இந்த நிகழ்ச்சி தான் . தன் மகனுக்காக ஆரம்பத்தில் போராடி வந்தவருக்கு இப்பொழுது வரை அதற்கான முடிவு கிடைக்கவில்லை.
அதை அனைத்தையுமே கடந்து வந்தவர் இப்பொழுது வரை ஒரு சிங்க பெண்ணாக வாழ்ந்து வருகிறார். இவருக்கு முதல் மற்றும் இரண்டாவது திருமணம் முறிவில் முடிந்தாலும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு மூன்றாவதாக பீட்டர் பாலு என்பவரை திருமணம் செய்து கொண்டார்.
இது மிகப் பெரிய சர்ச்சையை கிளப்பியது. மேலும் அவரையும் விவாகரத்து செய்துவிட்டு இப்பொழுது தனியாக வாழ்ந்து வருகிறார். இப்படி இருக்க அவரின் பீட்டர் பாலுடன் அவர் ஆரம்பத்தில் எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் ட்ரெண்டிங்காகி வருகிறது. இந்த புகைப்படம் தான் இணையத்தில் பெரும் சர்ச்சையை கிளப்பியது.