நியூசிலாந்து அணிக்கு எதிரான கடைசி போட்டியில் இந்திய அணி 168 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்று தொடரை கைப்பற்றி அசத்தி உள்ளது.
IND vs NZ:
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 வது டி20 போட்டி நேற்று, அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. முதல் 2 போட்டிகளில் இரு அணிகளும் தலா ஒரு வெற்றியை பெற்றிருந்தால், நேற்று நடைபெற்ற இந்த போட்டி தொடரின் வெற்றியாளரை தீர்மானிக்கும் போட்டியாகவே பார்க்கப்பட்டது. எனவே, மிகவும் எதிர்பார்ப்பு நிறைந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில், இஷான் கிஷன் ஒரு ரன்னில் வெளியேற, சுப்மன் கில், ராகுல் திரிபாதி ஜோடி அதிரடி காட்ட தொடங்கினர். இவர்களில், ராகுல் திரிபாதி 44 ரன்களில் வெளியேற, சூர்யகுமார் (24), ஹர்திக் பாண்டியா (30) என சீரான இடைவெளியில் வெளியேறினர். மறுபுறம் அதிரடி காட்டிய சுப்மன் கில் 63 பந்தில் 12 பவுண்டரி 7 சிக்ஸர் உட்பட 126* ரன்கள் விளாசி அசத்தினார். இதன் மூலம், இந்திய அணி 20 ஓவர் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 234 ரன்களை குவித்திருந்தது.
235 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணி, இந்திய வீரர்களின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், 12.1 ஓவரில் 66 ரன்களுக்குள் சுருண்டது. இந்தியா சார்பாக, ஹர்திக் பாண்டியா 4, அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக் மற்றும் சிவா மாவி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றி இருந்தனர். இந்த வெற்றியால், இந்திய அணி தொடரை கைப்பற்றியதுடன், சொந்த மண்ணில் கடந்த 2019ம் ஆண்டு முதல், தொடரை இழக்காத அணி என்ற பெருமையும் தக்கவைத்துள்ளது.