லீக் ஒன் தொடரில், மெஸ்ஸியின் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் அணியானது மாண்ட்பெல்லியர் அணியை 3-1 என்ற கோல் வித்தியாசத்தில் வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் உயர்ந்த இடத்தை பிடித்துள்ளது.
PSG:
உலக கோப்பை கால்பந்து தொடருக்கு பிறகு, கால்பந்து மீதான ரசிகர்களின் ஆர்வம் அதிகரித்து கொண்டே வருகிறது. இவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், வெளிநாடுகளில் பல பெயர்களில் லீக் தொடர்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த வகையில், பிரான்ஸில் இன்று மெஸ்ஸியின் பாரிஸ் செயின்ட்-ஜெர்மைன் (PSG) அணி மாண்ட்பெல்லியர் அணியை எதிர்த்து லீக் ஒன் தொடரில் மோதியது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த போட்டியில், இரு அணிகளும் சம பலத்துடன் இருந்தால், ஆட்டத்தின் முதல் பாதியானது கோலின்றி முடிந்தது. இதையடுத்து தொடங்கப்பட்ட, 2வது பாதியில், PSG அணியின் ஃபேபியன் ரூயிஸ் 55 வது நிமிடத்தில் கோல் ஒன்றை அடித்தார். இதனை தொடர்ந்து, 72 வது நிமிடத்தில், நட்சத்திர வீரர் மெஸ்ஸி PSG அணி சார்பாக மற்றொரு கோலை அடித்தார்.
IND vs NZ: 168 ரன்கள் வித்தியாசத்தில் தொடரை வென்ற இந்தியா…, சொந்த மண்ணில் தொடரும் சாதனை வேட்டை!!
மேலும், ஆட்டத்தின் 2வது பாதி நேரம் முடியும் கடைசி நேரத்தில் (90+2) வாரன் ஜைர்-எமெரி ஒரு கோல் அடிக்க, PSG அணியின் கோல் எண்ணிக்கையானது மூன்றாக உயர்ந்தது. இதற்கிடையில் மாண்ட்பெல்லியர் அணி வீரர் 89 வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்திருந்தார். இதனால், ஆட்ட நேர முடிவில் PSG அணியானது 3-1 என்ற கோல் கணக்கில் மாண்ட்பெல்லியர் அணியை வீழ்த்தி, புள்ளிபட்டியலில் 51 புள்ளிகளுடன் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது.