நியூசிலாந்துக்கு எதிரான 3 வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 385 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது.
IND vs NZ:
இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3வது ஒருநாள் போட்டி இந்தூரில் உள்ள ஹோல்கர் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி கேப்டன் டாம் லாதம் பில்டிங்கை தேர்வு செய்தார். இதனால், ரோஹித் சர்மா மற்றும் சுப்மன் கில் இந்தியாவுக்கு தொடக்கம் தர களமிறங்கினார்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இவர்கள் இருவரும், ஆரம்பம் முதலே எதிரணியின் பந்து வீச்சை அடித்து நொறுக்கி சதம் விளாசினார். இதில், ரோஹித் சர்மா 85 பந்தில் 9 பவுண்டரி 6 சிக்ஸர் உட்பட 101 ரன்கள் எடுத்து மைக்கேல் பிரேஸ்வெல் பந்தில் போல்டானார். இவரை தொடர்ந்து, சுப்மன் கில் 78 பந்தில் 13 பவுண்டரி 5 சிக்ஸர் உட்பட 112 ரன்கள் எடுத்து வெளியேறினார். இவர்கள் இருவரும் இணைந்து 212 ரன்கள் என்ற அடித்தளத்தை சிறப்பாக அமைத்துக் கொடுத்தனர்.
ICC அணிக்கு கேப்டனான இந்தியாவின் ஹர்மன்ப்ரீத் கவுர்…, மந்தனா & ரேணுகா சிங் இடம் பெற்று அசத்தல்!!
இவர்களுக்கு பின் வந்த, விராட் கோலி (36), இஷான் கிஷன் (17), சூர்யகுமார் யாதவ் (14), ஹர்திக் பாண்டியா (54), வாஷிங்டன் சுந்தர் (9), ஷர்துல் தாக்கூர் (25) மற்றும் குல்தீப் யாதவ் (3) என சீரான இடைவெளியில் வெளியேறினர். இதனால், இந்திய அணி 50 ஓவர் முடிவில், 9 விக்கெட் இழப்புக்கு 385 ரன்களை குவித்து உள்ளது.