நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில், இந்திய வீரர்களின் அசத்தலான பந்து வீச்சால் 64 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
IND vs NZ:
இந்திய அணி நியூசிலாந்து அணிக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட தொடரை விளையாடி வருகிறது. இந்த தொடரில், முதல் போட்டியானது மழை காரணமாக கை விடப்பட்டிருந்தது. இதனால், மீதமுள்ள 2 போட்டிகளை வெல்லும் அணியை தொடரை கைப்பற்றும் என்ற நிலை ஏற்பட்டது. இந்நிலையில், இன்று 2வது டி20 போட்டி பே ஓவல் மைதானத்தில் நடைபெற்றது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த போட்டியில், டாஸ் வென்ற நியூசிலாந்து கேப்டன் பவுலிங்கை தேர்வு செய்திருந்தார். இதையடுத்து களமிறங்கிய இந்திய அணியில், ரிஷப் பந்த் 6, இஷான் கிஷன் 36, ஸ்ரேயாஸ் ஐயர் 13, ஹர்திக் பாண்டியா 13, ஹூடா 0, வாஷிங்டன் சுந்தர் 0 என அடுத்தடுத்து வெளியேற, சூர்யகுமார் மட்டும் நிலைத்து நின்று விளையாடினார். இவர் 55 பந்தில் 11 பவுண்டரி, 7 சிக்ஸர் உட்பட 111* ரன்கள் எடுத்து அசத்திருந்தார். இதனால், இந்திய அணி 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் வித்தியாசத்தில் 191 ரன்கள் எடுத்திருந்தது.
192 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணியில் கேன் வில்லியம்சன் 61, டெவோன் கான்வே 25 என இவர்கள் மட்டும் ஓரளவு நிலைத்திருக்க மற்ற வீரர்கள், இந்திய பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து வெளியேறினர். இதனால், 18.5 ஓவரிலேயே 126 ரன்களிலேயே நியூசிலாந்து அணி சுருண்டது. இதன் மூலம், இந்திய அணி 65 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டியில், தீபக் ஹூடா 4, சாஹல், சிராஜ் தலா 2 மற்றும் வாஷிங்டன் சுந்தர் மற்றும் புவனேஸ்வர் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்த்தி இருந்தனர்.