நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில், சஞ்சு சாம்சன் பிளேயிங் லெவனில் இல்லாதது குறித்து, இவரது ரசிகர்கள் பிசிசிஐக்கு எதிராக சமூக வலைத்தளத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.
சஞ்சு சாம்சன்:
இந்திய அணி டி20 உலக கோப்பைக்கு பிறகு, நியூசிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டு உள்ளது. இந்த தொடருக்கான இந்திய அணியில், டி20 உலக கோப்பையில் இடம் பெறாத, இஷான் கிஷன், சுப்மன் கில், சஞ்சு சாம்சன் உள்ளிட்ட வீரர்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இதில், சஞ்சு சாம்சனை ஆசிய கோப்பை மற்றும் டி20 உலக கோப்பை உள்ளிட்ட அணிகளில் தேர்வு செய்யாமல் இருந்ததற்கு இவரது ரசிகர்கள் முன்பு போராட்டம் நடத்துவதாக இருந்தார்கள்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதனை அறிந்த பிசிசிஐ சஞ்சு சாம்சனை இந்தியா A அணிக்கு இவரை கேப்டனாக நியமித்தது. இந்த பொறுப்பையேற்று இவர் நியூசிலாந்து A அணிக்கு எதிரான தொடரையும் சிறப்பாக வழி நடத்தி கைப்பற்றி கொடுத்தார். இதன் பிறகு, தற்போது தான், நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்திய அணியில் இடம் பிடித்துள்ளார். ஆனாலும், இவரை இந்திய அணி 2வது டி20 போட்டியில், பிளேயிங் லெவனில் தேர்வு செய்யவில்லை.
இதற்கு இந்திய ரசிகர்கள், தங்களது எதிர்ப்பினை சமூக வலைத்தளங்களில் தெரிவித்து வருகின்றனர். இதில், குறிப்பாக, டி20 உலக கோப்பையில் ரிஷப் பந்த் சொதப்பினாலும், இவரை பிளேயிங் லெவனில் தேர்வு செய்கிறீர்கள். ஆனால், சஞ்சு சாம்சனுக்கு ஏன் வாய்ப்பு அளிக்க மறுக்கிறீர்கள் என்று பிசிசிஐக்கு எதிராக கேள்விகள் எழுப்பியுள்ளனர். மேலும், ஆண்டுகள், கேப்டன்கள் என எல்லாம் மாறினாலும், சஞ்சு சாம்சன் கைவிடப்படுவது மாறவே மாறாது என்று தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி உள்ளனர்.