இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் ஆடிய இந்திய அணியில், தொடக்க வீரர் ரோஹித் சர்மா 47 ரன்களுக்கு ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். அதன் பிறகு வந்த விராட் கோலி , சுப்மன் கில்லுடன் இணைந்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார்.
அதைத்தொடர்ந்து 79 ரன்கள் குவித்த நிலையில் தொடையில் ஏற்பட்ட காயம் காரணமாக கில் ஓய்வு பெற்றார். இதற்கிடையில் விராட் கோலி சதம் அடித்து அசத்தினார். இதன் மூலம், சர்வதேச ODI கிரிக்கெட்டில் 50 சதம் கடந்த முதல் இந்திய வீரர் என்ற சாதனையை படைத்துள்ளார். அடுத்து வந்த ஷ்ரேயாஸ் ஐயரும் சதம் விளாசினார்.
TNPSC குரூப் 4 தேர்வர்களே.., 2013 ல் கேட்கப்பட்ட முக்கிய தமிழ் வினாக்கள்.., தெரிந்துகொள்ளுங்கள்!!!
இறுதியில் இந்திய அணி 50 ஓவர் முடிவில் 397 ரன்கள் குவித்தது. நியூசிலாந்து அணி சார்பில் டிம் சவுத்தி 3 விக்கெட்களை வீழ்த்தினார். இதையடுத்து 398 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் நியூசிலாந்து அணி விளையாடி வருகிறது.