சர்வதேச இந்திய அணியானது தற்போது ஒரு நாள் உலக கோப்பை தொடரில் தீவிர கவனம் செலுத்தி வருகிறது. இந்த தொடரை பொறுத்த வரையில் இதுவரை இந்திய அணி விளையாடிய 5 போட்டிகளையும் வென்று புள்ளிப்பட்டியலில் +1.353 ரன் ரேட்டுடன் முதலிடத்தில் உள்ளது. இந்த தொடர் வெற்றியை தக்க வைத்துக் கொள்ளும் முனைப்பில் வரும் அக்டோபர் 29 ஆம் தேதி நடப்பு சாம்பியன் அணியான இங்கிலாந்தை எதிர்கொள்ள இருக்கிறது.
Enewz Tamil WhatsApp Channel
இந்த போட்டியானது லக்னோவில் உள்ள ஏகானா ஸ்போர்ட்ஸ் சிட்டி மைதானத்தில் நடைபெற இருக்கிறது. இதற்காக, இந்திய அணி வீரர்கள் இன்று (அக்டோபர் 26) முதல் தங்களது பயிற்சியை தொடங்க திட்டமிட்டுள்ளனர். இதற்கிடையில், இந்திய அணியின் ஆல்ரவுண்டரான ஹர்திக் பாண்டியா இந்த போட்டியில் விளையாட மாட்டார் என தகவல் வெளியாகி உள்ளது. இதையடுத்து, இங்கிலாந்து அணிக்கு எதிராக ஹர்திக் பாண்டியாவுக்கு பதில் அஸ்வின் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது.