தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை., மாணவர்கள் குஷி!!!

0
தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை., மாணவர்கள் குஷி!!!
தமிழகத்தில் இந்த மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை., மாணவர்கள் குஷி!!!

தமிழகத்தில் புகழ்பெற்ற ஊர்வலம், தலைவர்கள் தினம் உள்ளிட்ட முக்கிய நாட்களில் பாதுகாப்பு நலன் கருதி உள்ளூர் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் சிவகங்கை மாவட்டத்தில் நாளை (அக்டோபர் 27) மருதுபாண்டியர் 222வது நினைவு தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதனால் மருது சகோதரர்களுக்கு மரியாதை செலுத்த உள்ளூர் மட்டுமல்லாமல் வெளி இடங்களில் இருந்தும் எண்ணற்ற பொதுமக்கள், அரசியல் கட்சி தலைவர்கள் என பலரும் வருகை தருவார்கள்.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழக மக்களுக்கு நற்செய்தி., சென்னைக்கு அருகில் “Wonderla” பூங்கா., அரசு ஒப்புதல்!!!

இதனை கருத்தில் கொண்டு சிவகங்கை மாவட்டத்தில் திருப்புவனம், மானாமதுரை, திருப்பத்தூர், காளையார்கோவில், இளையான்குடி, தேவகோட்டை மற்றும் சிவகங்கை ஒன்றியங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (அக்டோபர் 27) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here