ஐசிசி சார்பாக ஒருநாள் உலக கோப்பை தொடர் இந்தியாவில் கடந்த அக்டோபர் 5 ஆம் தேதி முதல் ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடர் முழுவதும், இந்தியாவில் உள்ள பல்வேறு மைதானங்களை மையமாக கொண்டு நடைபெற்று வருவதால் உள்ளூர் ரசிகர்கள் பலர், போட்டி போட்டு கொண்டு டிக்கெட்டுகளை வாங்கி நேரடியாக மைதானத்திற்கு சென்று பார்த்து வருகின்றனர்.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில், மும்பை கிரிக்கெட் வாரியமானது உலக கோப்பையை காண வரும் ரசிகர்களுக்காக சிறப்பு ஏற்பாடு ஒன்றை செய்துள்ளது. அதாவது, வரும் நவம்பர் 2 ஆம் தேதி இலங்கை அணியை எதிர்த்து இந்திய அணி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் மோத உள்ளது. இந்த போட்டி முதல் மும்பையில் நடைபெற இருக்கும் அரையிறுதி போட்டி வரையிலும் நேரில் காண வரும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு இலவசமாக பாப்கார்னும், குளிர்பானமும் இலவசமாக வழங்கப்படும் என மும்பை கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
உலகக்கோப்பை 2023.. அரையிறுதி வாய்ப்பை இழக்கிறதா வங்கதேசம்?