#INDvsAUS 3வது டெஸ்ட் – மழையினால் ஆட்டம் பாதிப்பு!!

0

தற்போது இந்தியா மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது. தற்போது போட்டியின் முதல் நாளில் சிட்னியில் மழை பெய்து வருவதால் ஆட்டம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தியா vs ஆஸ்திரேலியா:

இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி தற்போது டெஸ்ட் தொடர்களை விளையாடி வருகிறது. இன்று மூன்றாவது டெஸ்ட் போட்டி தொடங்கியிருக்கிறது. பல இன்னல்களுக்கு பிறகு இந்த டெஸ்ட் போட்டி சிட்னியில் வைத்து நடைபெறுகிறது. கொரோனா பரவல் காரணமாக இந்த போட்டி இங்கு நடைபெறுமா என்று சந்தேகிக்கப்பட்டது. தற்போது தக்க பாதுகாப்புகளுடன் போட்டி நடைபெற்று வருகிறது. மூன்றாவது டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா கேப்டன் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

மழையினால் பாதிப்பு:

ஆஸ்திரேலிய அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக வில் புகோவ்ஸ்கி மற்றும் டேவிட் வார்னர் களம் இறங்கினர். ஆஸ்திரேலியாவிற்கு துவக்கத்திலேயே அதிர்ச்சி காத்திருந்தது. முகமத் சிராஜ் வீசிய பந்தில் வார்னர், புஜாராவிடம் கேட்ச் கொடுத்து தனது ஆட்டத்தை இழந்தார். இவர் 5 ரன்களில் பெவிலியன் திரும்பி ஏமாற்றினார். அதன் பிறகு மார்னஸ் லாபுசாக்னே களம் வந்தார். போட்டியின் நடுவே மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டுள்ளது. தற்போது களத்தில் புகோவ்ஸ்கி 14 ரன்கள், மற்றும் மார்னஸ் 2 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருக்கின்றனர்.

இந்த வார குக் வித் கோமாளியில் கலந்துகொள்ளாத புகழ் – இது தான் காரணமா??

தற்போது மழை நின்ற பின்னரே ஆட்டம் தொடங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் மழை தொடர்ந்து நீடித்து வருவதால் முதல் நாள் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் கூறுகையில் போட்டியின் முதல் இரண்டு நாள் மழை தொடரும் என்றும் 3வது நாளில் இருந்து போட்டி நடைபெற வாய்ப்புள்ளதாகவும் கூறியுள்ளார். இந்த போட்டி ட்ராவில் முடிவதற்கு அதிக வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

லைவ் ஸ்கோர்:

ஆஸ்திரேலியா – 21\1
புகோவ்ஸ்கி -14
மார்னஸ்-2

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here