தமிழக மட்டுமல்லாமல் நாடு முழுவதும் ஜிஎஸ்டி வரி அமல்படுத்தப்பட்டதிலிருந்து பல்வேறு பொருட்களின் விலை உயர்ந்து கொண்டே தான் உள்ளது. அந்த வகையில் சமீபத்தில் கூட வீட்டின் பெயர் மாற்றுதல், பத்திரப்பதிவு ஆகியவற்றுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டது. இது பொதுமக்களிடையே மிகுந்த அதிர்ச்சியை ஏற்படுத்தியது தற்போது இதை தொடர்ந்து மற்றொரு கட்டணமும் உயர்த்தப்பட்டுள்ளது. அதாவது சாலை விபத்தில் சிக்கியவர்களுக்கு காப்பீட்டு தொகை வழங்க அந்தந்த காப்பீட்டு நிறுவனங்களுக்கு தேவையான ஆவணங்களை சமர்ப்பிப்பது வழக்கம்.
Enewz Tamil WhatsApp Channel
இந்த ஆவணங்கள் அனைத்தையும் காவல்துறை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து தரப்படும். இதற்காக ரூபாய் 100 கட்டணமும் காவல்துறை சார்பில் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இதுவரை ஆவண பதிவிறக்கத்திற்கு 100 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அதை 125 ரூபாயாக உயர்த்தி உள்ளனர்.
இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்(18.01.2024) – முழு விவரம் உள்ளே!!