நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களின் ஓய்வூதிய கால நலன் கருதி, மாதாந்திர ஊதியத்தில் குறிப்பிட்ட தொகை PF கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அதேபோல் ஊழியர்களின் அவசரகால தேவைக்காகவும் PF கணக்கில் இருந்து குறிப்பிட்ட சதவீதத்தை EPFO நிறுவனம் வழங்கி வருகிறது. இந்த சூழலில் PF கணக்கின் புதுப்பித்தலுக்கு ஆதார் ஆவணம் குறித்து முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அதாவது ஒவ்வொரு இந்திய குடிமகனுக்கும் அடையாள மற்றும் முகவரி சான்றாகவே ஆதார் அட்டை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. ஆனால் பிறந்த தேதிக்கான ஆவணமாக ஆதார் அட்டையை கருத முடியாது எனக் கூறி ஏற்கக்கூடிய பட்டியலில் இருந்து ஆதார் நீக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனால் பிறந்த தேதி புதுப்பித்தல் செய்பவர்கள் ஆதாரை ஆவணமாக இணைக்க வேண்டாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
தமிழக மக்கள் கவனத்திற்கு.., இதற்கான கட்டணம் அதிரடியாக உயர்வு.., அரசாணை வெளியீடு!!!