மாதந்தோறும் சிறந்த வீரருக்கான விருதை ஐசிசி வழங்கி வருகிறது. அதன்படி கடந்த மாதம் நடந்த போட்டிகளில் சிறப்பாக செயல்பட்ட இந்திய அணியின் அஷ்வினுக்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
ஐசிசி:
கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கும் வகையில் ஐசிசி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி மாதந்தோறும் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு விருதினை வழங்க முடிவு செய்தது. இதனை இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டு வந்தது. மேலும் ரசிகர்கள் தங்களுக்கு பிடித்த வீரர்களை வாக்களித்து அவர்களை விருதினை பெற வைக்கலாம் என்றும் ஐசிசி அறிவித்தது. அதன்படி ஜனவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதினை இந்திய அணியின் ரிஷாப் பாண்ட் பெற்றார்.
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
பின்பு தற்போது பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருத்திற்கான பரிசீலிக்கப்பட்ட பெயர் பட்டியில் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அதன்படி அதில் இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் அஸ்வின் பெயர் இடம் பெற்றிருந்தது. தற்போது பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரராக அஸ்வின் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
‘மத மாற்றத்தில் ஈடுபட்டால் 10 ஆண்டு சிறை’ – மாநில அரசு அதிரடி!!
இவர் கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் சுமார் 24 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். மேலும் ஒரு சதமும் அடித்து அசத்தியுள்ளார். அதுமட்டுமல்லாமல் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தொடர் நாயகன் விருதையும் பெற்று அசத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.