இசையமைப்பாளர் அனிருத் ஹீரோவாக நடிக்கும் முதல் படத்தின் தயாரிப்பாளராக நான் தான் இருப்பேன் என நடிகர் சிவகார்த்திகேயன் சமூக வலைத்தளத்தில் தெரிவித்து உள்ளார்.
அனிருத் ஹீரோ:
தமிழ் சினிமாவில் தனுஷ் நடித்த ‘3’ திரைப்படத்தின் மூலம் இசை அமைப்பாளராக அறிமுகமானவர் அனிருத். முதல் படத்தின் மூலமே உலகளவில் பிரபலமானார் அனிருத். எனவே குறுகிய காலத்திலேயே அஜித், விஜய், ரஜினி, கமல் போன்ற உச்ச நட்சத்திரங்களின் படத்திற்கு இசை அமைத்தார். வரிசையாக இவரது ஆல்பங்கள் இளைஞர்கள் மத்தியில் ஹிட் அடித்தது.
இதனால் வெகு விரைவில் சிறந்த இசை அமைப்பாளர்களில் ஒருவராக அனிருத் உயர்ந்தார். இவர் இசையமைக்கும் பாடங்களில் அவ்வப்போது இடையில் தோன்றுவதும் உண்டு. சமூக வலைதளத்தில் ஸ்டைல் ஆக போஸ் கொடுத்தபடி அனிருத், ஒரு போட்டோவை பதிவிட்டு இருந்தார். அதற்கு லைக்குகள் குவிந்தது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
அதில் நடிகர் சிவகார்த்திகேயன் ‘சார்.. எப்போனாலும் சரி, என்னைக்குனாலும் சரி. நீங்க ஹீரோவா நடிக்கிற முதல் படத்தின் தயாரிப்பாளர் நான் தான். நன்றி சார்’ என்று கூலாக கமெண்ட் செய்துள்ளார். இதற்கும் லைக்குகள் அள்ளுகிறது. இதைப் பார்த்தால் விரைவிலேயே அனிருத் ஹீரோ அவதாரம் எடுப்பார் என தோன்றுகிறது.