சிக்கன் என்றாலே குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான உணவு. இந்த சிக்கனில் எந்த வெரைட்டி செய்து கொடுத்தாலும் மிச்சமே வைக்காமல் சாப்பிட்டு விடுவர். அதன் சுவை அந்த அளவிற்கு இருக்கும். இப்பொழுது சிக்கனை வைத்து சுவையான வடை எப்படி செய்வது என பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
சிக்கன் – 1/2 கி
கடலைப்பருப்பு – 100 கி
வெங்காயம் – 2
பச்சைமிளகாய் – 4
கருவேப்பிலை
கொத்தமல்லி
புதினா
சீரகம்
சீரகத்தூள் – 1 தேக்கரண்டி
கரம் மசாலா – 1 தேக்கரண்டி
செய்முறை
முதலில் கடலை பருப்பை 3 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும். இப்பொழுது அதில் தண்ணீரை வடித்து 4 பச்சைமிளகாய் மற்றும் 1 தேக்கரண்டி சீரகம் சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக்கொள்ளவும். இப்பொழுது சிக்கனை சிறிய துண்டுகளாக நறுக்கி அதனை கடலைமாவில் சேர்த்து உப்பு மிளகாய்த்தூள், கரம் மசாலா, மஞ்சள்தூள் சேர்த்து நன்கு பிசைந்துகொள்ளவும்.
அதில் சிறியதாக நறுக்கிய வெங்காயம், கருவேப்பிலை, கொத்தமல்லி மற்றும் புதினாவை சேர்த்து பிசையவும். இப்பொழுது அதனை 15 நிமிடங்கள் மூடி போட்டு ஊறவைத்துக்கொள்ளவும். இப்பொழுது சிறிது எண்ணெயை கையில் தடவி வடை போல தட்டி எடுத்து சூடான எண்ணெயில் பொறித்து எடுத்தால் சுவையான சிக்கன் வடை தயார்.