ஒரு மனிதனுக்கு மிக முக்கியமான ஒன்று என்றால் அது கல்வி தான். மேலும் இந்த காலத்தில் படித்தவருக்கே வேலை இல்லாத சூழ்நிலை ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் பலரும் அரசு வேலைக்கு முயற்சி செய்து வருகின்றனர். ஆன்மீக ரீதியில் அரசு வேலை உடனடியாக கிடைப்பதற்கு சில பரிகாரங்கள் உள்ளன. அதனை பற்றி இந்த பதிவில் காணலாம்.
அரசு வேலை கிடைக்க வேண்டுமா??
இப்பொழுது உள்ள காலகட்டத்தில் மக்கள் தொகை அதிகரித்துள்ளதால் போட்டியும் அதிகரித்துள்ளது. இதனால் வேலை வாய்ப்பும் குறைந்துள்ளது. பலரும் தனியார் நிறுவனத்தில் குறைந்த சம்பளத்திற்கே வேலை பார்த்து வருகின்றனர். மேலும் பலர் அரசு பணிக்காக பல வருடங்களாக தேர்வு எழுதுகின்றனர். ஆனால் 100 காலிப்பணியிடங்கள் இருக்கும் இடத்தில் லட்சக்கணக்கானவர்கள் தேர்வு எழுதினால் எப்படி வேலை கிடைப்பது சாத்தியமாகும்.
ஒருவருக்கு அரசு வேலை கிடைக்க வேண்டும் என்றால் அவரின் ஜாதகத்தில் அந்த அமைப்பு இருக்க வேண்டும். அதாவது ஜாதகத்தில் சூரியனின் நிலையை பொறுத்தே அவருக்கு அரசு வேலை கிடைக்குமா?? கிடைக்காதா?? என்பதை கணிக்க முடியும். மேலும் இதற்கு ஆன்மீக பரிகாரங்களும் உள்ளன. ஜாதகத்தில் சூரியன் நட்பு வீட்டிலோ, சூரியன் உச்சம் ஆட்சி பெற்றிருந்தாலோ அவர்களுக்கு அரசு வேலை வாய்ப்பு கிடைக்க அதிகம் வாய்ப்புள்ளது.
உங்கள் வீட்டில் பசு மாடுகள் வளர்த்தாலும் சரி அல்லது பக்கத்தில் இருந்தாலும் சரி வெள்ளிக்கிழமைகளில் அதுவும் குறிப்பாக கன்றிட்ட பசு மாடுகளுக்கு வாழைப்பழங்கள் கொடுக்க வேண்டும். இதனால் பசுவில் இருக்கும் தேவர்கள் மனம் மகிழ்ந்து உங்கள் பாவ செயல்களால் ஏற்பட்ட வினைகள் அனைத்தும் தீரும். இதனை ஒவ்வொரு வெள்ளிக் கிழமையும் தவறாமல் செய்து வர வேண்டும். இதனால் நீங்கள் செய்யும் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.
மேலும் நீங்கள் தேர்வுக்கு விண்ணப்பித்த நாளில் இருந்து தேர்வு எழுதி தேர்வு முடிவுகள் வரும் நாள் வரை தினமும் சனி பகவானின் வாகனமாக காக்கைக்கு மஞ்சள் நிறம் கொண்ட உணவுகளை கொடுக்க வேண்டும். இதனால் சனி பகவானின் மனம் குளிர்ந்து நினைத்த காரியத்தில் வெற்றி பெறலாம்.