அசைவ பிரியர்களுக்கு சிக்கன் எவ்வளவு விருப்பமோ அந்த அளவிற்கு சைவ பிரியர்களுக்கு பன்னீர். பாலில் இருந்து செய்யப்பட்ட பன்னீரை குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர். இப்பொழுது இந்த பன்னீரை வைத்து சூப்பரான மசாலா எப்படி செய்வது என பார்க்கலாம் வாங்க.
தேவையான பொருட்கள்
- பன்னீர் – 250 கிராம்
- மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி
- மஞ்சள்தூள் – 1 தேக்கரண்டி
- நெய் – 5 தேக்கரண்டி
- சீரகம் – 1 தேக்கரண்டி
- பட்டை, கிராம்பு
- பிரியாணி இலை
- வெங்காயம் – 3
- இஞ்சிபூண்டு விழுது – 1 தேக்கரண்டி
- மல்லித்தூள் – 1 தேக்கரண்டி
- கரம் மசாலா – 1 தேக்கரண்டி
- தக்காளி – 4
- பச்சைமிளகாய் – 4
- தயிர் – 1 கப்
- உப்பு – தேவையான அளவு
- எண்ணெய் – தேவையான அளவு
செய்முறை
முதலில் பன்னீரை வெதுவெதுப்பான நீரில் போட்டு 10 நிமிடங்கள் ஊற வைக்க வேண்டும். பிறகு அதனை சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்துக் கொள்ளவும். அதன்பின் அதில் உப்பு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள் சேர்த்து கலந்து தோசை கல்லில் எண்ணெய் ஊற்றி வறுத்து எடுக்கவும். பிறகு ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி அதில் சிறிது நெய் சேர்த்து பிரியாணி இலை, பட்டை, இஞ்சிபூண்டு விழுது மற்றும் கிராம்பு சேர்த்து வதக்கவும்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
அதன்பின் பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும். பிறகு அரைத்த தக்காளி, மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், கரம் மசாலா மற்றும் மல்லித்தூள் சேர்த்து பச்சை வாடை போகும் வரை வதக்கவும்.
அதில் தயிர் சேர்த்து கிளறி பன்னீரை அதில் சேர்க்கவும். 10 நிமிடங்கள் கழித்து கொத்தமல்லி தூவி இறக்கினால் பன்னீர் மசாலா தயார்.