உங்கள் முடி நீளமாக வெட்ட வெட்ட வளர வேண்டுமா?? வாரம் இரண்டு முறை இதை பயன்படுத்தினாலே போதும் முடி வளர்ந்து கொண்டே இருக்கும். இதற்கு நாம் அதிக செலவு செய்ய தேவையில்லை. வீட்டில் உள்ள பொருட்களை வைத்தே நீளமான கூந்தலை பெற முடியும். நமது முன்னோர்கள் பயன்படுத்திய முறைகளை பயன்படுத்தினாலே போதும் கூந்தல் உதிர்வு பிரச்சனைகளில் இருந்து முழுமையாக விடுபட முடியும்.
வெங்காயம்:
வெங்காயத்தில் சல்பர் சத்து அதிகமாக உள்ளது. இதனால், இவை கூந்தல் உதிர்வை தடுத்து முடி வளர்ச்சியை அதிகரிக்க செய்கிறது. தலையில் உள்ள நுண் கிருமிகள் மற்றும் பூஞ்சைகளை அளிக்கிறது. முடியின் வேர்கால்களுக்கு ஊட்டச்சத்து கொடுக்கிறது. வெங்காயத்தில் உள்ள ஆன்டி ஆக்சிடன்ட்டுகள் இளநரை வராமல் தடுக்கிறது.
பூண்டு:
பூண்டில் ஜிங்க், சல்பர், கால்சியம் போன்ற முடி வளர்ச்சிக்கு தேவையான மூலக்கூறுகள் இருப்பதால் முடி உதிர்வை தடுக்க பயன்படுகிறது. தலையில் பொடுகு இருப்பதால் தான் அத்துணை பிரச்சனைகளும் ஏற்படுகிறது. இந்த பிரச்சனைகளை தடுக்க பூண்டு பயன்படுகிறது. முடியின் வேர்க்கால்களில் இரத்த ஓட்டத்தை அதிகப்படுத்தி முடி வளர்ச்சியை தூண்டுகிறது.
வைட்டமின் “E”:
வைட்டமின் “E” மாத்திரை நம் முடிகளில் ஏற்படும் சேதத்தை குறைக்க பயன்படுகிறது. முடிகளில் வறட்சி தன்மை ஏற்படுவதால் தான் அடுத்தடுத்து பல பிரச்சனைகள் ஏற்படுகிறது. தலைக்கு எண்ணெய் தேய்க்க விருப்பதவர்கள் இரண்டு சொட்டு தேங்காய் எண்ணையுடன், ஒரு வைட்டமின் “E” மாத்திரையை கலந்து முடிக்கு தேய்த்தால் வறட்சி நீங்கிம்.
தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெய் முடிக்கு தேவையான போஷாக்கை கொடுக்கிறது. முடி வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச்சத்தை கொடுக்கிறது. தலையில் புழுவெட்டு, அரிப்பு, பொடுகு போன்றவற்றை தவிர்க்கும். மன அழுத்தம் உள்ளவர்கள் தேங்காய் எண்ணையை காயவைத்து தலைக்கு மசாஜ் செய்து வந்தால் உடலும், உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும்.
முடி உதிர்வு நிற்க:
சின்ன வெங்காயம் – 10, பூண்டு – 2 பல், வைட்டமின் “E” மாத்திரை – 1, தேங்காய் எண்ணெய் – 2 ஸ்பூன். முதலில் சின்ன வெங்காயம் மற்றும் பூண்டை தோலுரித்து தட்டி சாறு எடுத்து வடிகட்டி கொள்ளவும். இதனுடன் தேங்காய் எண்ணெய் மற்றும் ஒரு வைட்டமின் “E” மாத்திரையை கலந்து தலைக்கு தேய்க்க வேண்டும்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!
45 நிமிடம் கழித்து இயற்க்கை ஷாம்பூ அல்லது சீகைக்காய் பயன்படுத்தி கூந்தலை அலச வேண்டும். முடி உதிர்வு ஒரு வாரத்தில் நின்றுவிடும். முடி வெட்ட வெட்ட நீளமாக வளர்ந்துகொண்டே இருக்கும். வாரம் இரண்டு அல்லது மூன்று முறை பயன்படுத்தினாலே போதும்.