தற்போது வெள்ளித்திரைகளை விட சின்னத்திரைக்கு மக்கள் மத்தியில் மவுசு அதிகரித்துள்ளது என்றே சொல்லலாம். வீட்டில் உள்ள பெண்களுக்கு பொழுதுபோக்கே சீரியல் தான். அந்த வகையில் பிரபலமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருப்பது சித்தி சீரியல். இந்த சீரியலில் சர்ச்சைக்குரிய நாயகியான கஸ்தூரி நடிக்கவுள்ளாராம்.
கஸ்தூரி
வெள்ளித்திரையில் உள்ள நடிகைகள் தங்கள் மார்க்கெட் இறங்கி வயதான பிறகு சீரியலுக்கு வருவது வழக்கம். அந்த வகையில் மீனா, தேவையாணி, குஷ்பூ என பலரும் சீரியலில் நடித்துள்ளனர். தமிழ் நாட்டை பொறுத்தவரை சீரியல் என்றாலே அது சன் டிவி தான் இருந்தது. சன் டிவி பார்க்காத ஆளே இல்லை என்றே சொல்லலாம். மேலும் முன்னாளில் எல்லாம் டிவியையே சன் டிவி என்று தான் சொல்லி அழைப்பார்.
Telegram Channel => Join செய்ய கிளிக் பண்ணுங்க!!
ஆனால் இப்பொழுது தான் பல விதமான தொலைக்காட்சிகளில் பல சீரியல்கள் ஓடிக்கொண்டுள்ளது. எத்தனை சேனல் வந்தாலும் சன் டிவிக்கு எப்பொழுதுமே மவுசு அதிகம் தான். மெட்டிஒலி, சித்தி போன்ற சீரியல்கள் மக்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்திருந்தது. தற்போது சித்தி 2 வெளியாகி வருகிறது. ராதிகா சீரியல் என்றாலே அது தனி அழகு தான்.
ஏனெனில் விறுவிறுப்புக்கு குறைவில்லாமல் இருக்கும். அதே போல் தான் சித்தி 2 யும் ஒளிபரப்பாகிக்கொண்டுள்ளது. இப்பொழுது கவர்ச்சி நடிகையும் பல சர்ச்சைக்குரிய நடிகையுமான கஸ்தூரி சீரியலில் நடிக்கவுள்ளாராம். வணிதாவிடம் வாயைக்கொடுத்து சோசியல் மீடியாவில் பல பேச்சுக்களை வாங்கினார். மேலும் அரசியலில் இறங்கப்போவதாகவும் பல பேட்டிகளில் சொல்லி வந்தார்.
உங்களுக்கும், பாலாஜிக்கும் இடைல இருக்குறது நட்பா?? காதலா?? – ஆரி கேட்ட கேள்வியால் திணறிய ஷிவானி!!
இந்நிலையில் கடைசியாக சீரியலில் தான் களமிறங்க உள்ளாராம். அதுவும் சன் டிவியில் ஒளிபரப்பாகும் அக்னி நட்சத்திரம் சீரியலில் நடிக்கவுள்ளாராம். நீண்ட நாட்களுக்கு பிறகு இவரின் நடிப்பை பார்க்க பலரும் ஆவலுடன் வேறு உள்ளனராம்.
ஆரம்பத்தில் இவர் சமுதாயத்தில் நடக்கும் எல்லா பிரச்சனைகளுக்கு குரல் கொடுத்ததால் மிகவும் டெரரான பெண் என்று நினைத்தால் கடைசியில் பிக் பாஸ் வீட்டில் இவர் நடந்துகொண்டது பலருக்கும் சிரிப்பையே ஏற்படுத்தியது. இப்பொழுது இவர் சீரியலில் இறங்கவுள்ளதை தெரிந்த பலரும் இவரை கலாய்த்தும் வருகின்றனர்.