உலகப் பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் ஜனவரி 27ம் தேதி கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெற உள்ளது. 2006 ம் வருடத்திற்கு பிறகு கும்பாபிஷேக நிகழ்ச்சி நடைபெறுவதால் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கோவில் நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த நிகழ்ச்சியில் பங்குபெற விரும்பும் பக்தர்களுக்கு ஆன்லைனில் விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டு வருகிறது. இதில் 47,000 பேர் விண்ணப்பித்துள்ளதால் குலுக்கல் முறையில் 2,000 பக்தர்கள் மட்டும் தேர்ந்தெடுக்க உள்ளனர்.
தலைநகர் டெல்லியை உலுக்கிய நிலநடுக்கம்., அச்சத்தில் குடியிருப்புகளை விட்டு வெளியேறிய பொதுமக்கள்!!
மேலும் 16 ஆண்டுகளுக்குப் பிறகு கும்பாபிஷேகம் நடைபெற இருப்பதால் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ள வாய்ப்பு உள்ளது. இதனால் ஜனவரி 27ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை வழங்கப்படுகிறது என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.