தமிழகத்தில் இந்த 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் அறிவிப்பு!!

0

தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே சில மாவட்டங்களில் லேசான மழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இன்னும் 2 நாட்கள் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

வானிலை நிலவரம்:

ஆண்டு தோறும் வருடத்தின் கடைசி மாதமான டிசம்பரில் மிக அதிக அளவிலான மழை பெய்து வரும். பின்பு ஜனவரியில் மழை குறைந்து பனிக்காலம் தொடங்கிவிடும். ஆனால் இந்த ஆண்டு தொடக்கத்தில் வழக்கத்திற்கு மாறாக ஜனவரி மாதத்தில் மிக அதிகளவிலான மழை பெய்தது. பின்பு தமிழகத்தில் கடந்த மாதம் முதல் மிக அதிக அளவிலான வெயில் அடித்தது.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இரண்டு வாரங்களாக மக்கள் அனைவரும் வெயிலின் தாக்கத்தினால் மிக கடுமையாக பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் தமிழகத்தில் வெயிலின் தாக்கம் குறைவடையும் வகையில் கடந்த சில நாட்களாகவே சில மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தற்போது குமரிக்கடல் பகுதியில் வளிமண்டல சுழற்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்து வருகிறது.

சென்னை இன்றைய தங்க விலை நிலவரம்!!

மேலும் தமிழகத்தில் வளிமண்டல மேலுக்கு சுழற்சி காரணமாக 8 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. அதன்படி தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், சேலம், தருமபுரி, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் தமிழகத்தில் வருகிற 17ம் தேதி முதல் மழை படிப்படியாக குறையும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here