‘தருண் கண்டிப்பா உனக்கு தான், என்ன ஆனாலும் அவனை உனக்கு கட்டி வைப்பேன்’ – ஸ்ருதியை ஏத்தி விடும் காதம்பரி!!

0

மௌன ராகம் சீரியலில் பல ட்விஸ்டுகளுடன் ஒளிபரப்பாகி வருகிறது. மேலும் தருண் உனக்கு மட்டும் தான் என்று காதம்பரி ஸ்ருதியை ஏத்தி விடுகிறார்.

மௌன ராகம்

மௌன ராகம் சீரியலில் சக்தி அழுதுக்கொண்டே வீட்டிற்கு வருகிறார். அங்கு மல்லிகா பேச்சு மூச்சு இல்லாமல் படுத்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சியாகிறார். எவ்வளவு எழுப்பியும் மல்லிகா கண்முழிக்க வில்லை. தருணும் அங்கு வந்து விட சக்தி கோவமடைகிறார்.

அம்மாவை காப்பாத்தணும் வாங்க கார்ல போகலாம் என்று சொல்ல சக்தி வர மறுக்கிறார். தானே ஆட்டோவில் அழைத்து சென்று கொள்வேன் என்றும் கூறுகிறார். தருணின் அத்தையும் வந்து விட சக்திக்கு எந்த ஆட்டோவும் கிடைக்கவில்லை. தருணின் அத்தை சக்தியை திட்டி மல்லிகாவை அழைத்து செல்கிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

அடுத்து ஸ்ருதி வீட்டில் சாப்பிடாமல் அழுதுக்கொண்டே உள்ளார். இதனால் கோவமடையும் காதம்பரி எப்படியும் தருண் உனக்கு தான் அம்மாவை நம்பு என்று ஆறுதல் சொல்கிறார். இதனால் கோவமடையும் கார்த்திக் காதம்பரியிடம் ஏன் இப்படி பேசுன என்று கேட்கிறார்.

ஸ்ருதிக்கு பிடிச்சதை கண்டிப்பா நான் வாங்கி தருவேன் என்று கத்துகிறார். தருணுக்கு பிடித்தால் தானே இதெலாம் நடக்கும் என்று சொல்கிறார். காதம்பரி இதனால் கோவமடைகிறார். உங்களுக்கு சந்தியாவை ரொம்ப புடிக்கும் அதனால தான் இப்படி எல்லாம் பேசுறீங்க என்று சொல்கிறார்.

ஸ்ருதி உங்க பொண்ணு மறந்துடாதீங்க. நீங்களும் இப்படி தான் தகுதியே இல்லாத மல்லிகாவை போய் விரும்புனீங்க என்று சொல்ல கார்த்திக் கோவமாகிறார். நாம விரும்புன ஒருத்தவங்க வேற ஒருத்தர் கூட வாழுறதை எப்படி ஏத்துக்க முடியும். ஒழுங்கா சத்யாவை வேலையை விட்டு தூக்குங்க என்று சொல்கிறார்.

இந்தியாவில் ஒரே நாளில் 2 லட்சத்தை தாண்டிய கொரோனா பாதிப்பு – அதிர்ச்சியில் மக்கள்!!

அடுத்ததாக சக்தி அம்மாவின் நிலைமையை பார்த்து கதறி அழுகிறார். தன் அம்மாவிற்கு இவ்வளவு உதவி செய்ததற்கு நன்றி என்று கூறுகிறார். மேலும் நீங்க வீட்டுக்கு போங்க என்றும் கூறுகிறார். நீங்க இங்க இருக்கிறது எனக்கு என்னவோ போல இருப்பதாகவும் சொல்கிறார்.

தான் ஒரு ஓரமாக இருந்து கொள்வதாகவும் சொல்கிறார். அடுத்து வருணின் அப்பா வீட்டில் சோகமாக அமர்ந்திருக்க வருணின் அத்தை என்ன என்று கேட்க நடந்த அனைத்தையும் கூறுகிறார். இதோடு எபிசோடும் முடிவடைந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here