டிஎன்ஏ ரிப்போர்ட்டை லட்சுமியின் பேகில் வைத்து விடும் ஹேமா – பதறும் வெண்பா! விறுவிறுப்பாகும் “பாரதி கண்ணம்மா”!!

0

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று கண்ணம்மா லட்சுமி ஹேமா வீட்டிற்கு சென்றதற்காக மிகவும் கோபம் அடைந்து விடுகிறார். லட்சுமியை கையோடு அழைத்து வருமாறும் கூறி ஆட்டோக்காரரை அனுப்பி விடுகிறார்.

“பாரதி கண்ணம்மா” சீரியல்

இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில் இன்று லட்சுமி ஹேமா மற்றும் பாரதியுடன் மிகவும் சந்தோசமாக விளையாடுகிறார். ஆனால், கண்ணம்மா லட்சுமி தன்னிடம் சொல்லாமல் அங்கு சென்றதற்கு மிகவும் கோபம் அடைந்து விடுகிறார். அதே போல் உடனடியாக லட்சுமியை வீட்டிற்கு அழைத்து வருமாறு ஆட்டோக்காரரிடம் கூறுகிறார். ஆட்டோக்காரர் வந்து லட்சுமி அழைத்து செல்ல இருப்பதாக கூறும் போது அனைவரும் சோகம் அடைந்து விடுகின்றனர்.

‘தருண் கண்டிப்பா உனக்கு தான், என்ன ஆனாலும் அவனை உனக்கு கட்டி வைப்பேன்’ – ஸ்ருதியை ஏத்தி விடும் காதம்பரி!!

இப்படியாக இருக்க, ஹேமா லட்சுமிக்கு பேகை எடுத்து வைக்க உதவுகிறார். அப்போது அவர்கள் இருவரும் வெண்பா எடுத்து வைத்துள்ள டிஎன்ஏ ரிப்போர்டையும் சேர்த்து புத்தக பைக்குள் வைத்து விடுகின்றனர். அந்த ரிப்போர்ட்டை எடுக்க வரும் வெண்பா லட்சுமி இருப்பதை பார்த்து அதிர்ந்து விடுகிறார். அதே போல் கோபமும் அடைகிறார். பின், வெண்பா அந்த ரிப்போர்ட் எங்கே என்று தேடுகிறார். அப்போது ஹேமா தான் தவறுதலாக லட்சுமியின் புத்தக பைக்குள் எடுத்து வைத்து விட்டதாக கூறுகிறார்.

இதனால் கோபம் அடையும் வெண்பா ஹேமாவை நன்றாக திட்டி விடுகிறார். இதனால் கோபம் அடையும் பாரதி வெண்பாவை திட்டி விடுகிறார். வெண்பா நேராக கண்ணம்மா வீட்டிற்கு செல்கிறார். பின், வேண்டாம் என்று வந்து விடுகிறார்.

பின், கண்ணம்மா லட்சுமியை நன்றாக திட்டி விடுகிறார். அப்போது லட்சுமி அழுது கொண்டே ஹேமா வீட்டில் அனைவரும் நன்றாக நடந்து கொண்டதாகவும், யாரும் தன்னை திட்டவில்லை என்றும் கூறுகிறார். இதனால் கண்ணம்மாவிற்கு என்னவோ போல் ஆகி விடுகிறது. இனி திட்ட மாட்டேன் என்று அவர் கூறி விடுகிறார்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இங்கு இப்படியாக இருக்க, வெண்பா தனது வீட்டில் வேலைக்காரியிடம் வந்து ரிப்போர்ட் லட்சுமிடம் இருப்பதாக கூறுகிறார். அதனை நினைத்து வெண்பாவிற்கு மிகவும் பயம் வந்து விடுகிறது. ஆனால், அந்த வேலைக்காரி வெண்பாவை ஊக்குவிப்பது போல பேசுகிறார். இதற்கு எதாவது தீர்வு இருக்கும் என்றும் கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசொட் முடிவடைந்து விடுகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here