பள்ளி ஆசிரியர்கள், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை தருவதாக தினம் தினம் புகார்கள் வரும்நிலையில், ஒரு ஸ்கூல் டீச்சர், பள்ளி மாணவனுடன் ஓட்டம் பிடித்துள்ளார்.. டீச்சருக்கு வயசு 27 ஆகிறது.. பையனுக்கு வயது 17… என்ன ஒரு புத்திசாலி தனம்.
ஐயோ … நான் வயசுல கம்மி:
ஹரியானா மாநிலம் பானிபட்டைச் சேர்ந்த தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியையாக பணியாற்றி வந்த பெண் ஒருவர் தன்னுடைய வீட்டில் டியூஷனும் எடுத்து வந்துள்ளார். அவர் பணியாற்றி வந்த பள்ளியில் வகுப்பாசிரியாக இருக்கும் அவரிடம், பதினோராம் வகுப்பு மாணவர் ஒருவர் டியூஷன் படிப்பதற்காக தேஸ்ராஜ் காலணியில் உள்ள ஆசிரியையின் வீட்டிற்கு தினமும் அவரின் வீட்டுக்கு சென்று வந்துள்ளார்.
இந்நிலையில் தற்போது கொரோனா காரணமாக பள்ளிகள் இல்லாததால் அந்த மாணவன் தினமும் 4 மணி நேரம் அந்த டீச்சரிடம் டியூசன் படித்து வந்துள்ளான். இந்நிலையில் கடந்த மே மாதம 29ம் தேதி தன் வீட்டிலிருந்து டியூசனிற்க சென்ற டியூசன் சென்ற மகன் மாலை நேரமாகியும் வீடு திரும்பவில்லை இதனால் பதற்றமடைந்த அந்த சிறுவனின் பெற்றோர் அந்த டியூசன் டீச்சருக்கு போன் செய்துள்ளனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த மாணவரின் பெற்றோர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். 2 பேரின் செல்போன் சிக்னலை வைத்து அவர்களை பிடிக்க முயற்சித்தனர். ஆனால் 2 பேருமே செல்போனை ஸ்விட்ச் ஆப் செய்திருந்தனர். மைனர் சிறுவனை கடத்தியதாக ஆசிரியை மீது வழக்குப் பதிவு செய்து இருவரையும் தீவிரமாக தேடி வருவதாக அதிகாரி ராணா பிரதாப் கூறினார்.
27 வயதுடைய அந்த ஆசிரியை திருமணம் ஆகி விவாகரத்து பெற்றுவிட்டு அவரின் பெற்றோருடன் வசித்து வந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தன்னிடம் படிக்கும் மாணவனுடன் டீச்சர் ஓடிப்போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்