முடி உதிர்வு பிரச்சனையா?? இந்த எண்ணெய்யை மட்டும் யூஸ் பண்ணி பாருங்க!!

0

இன்றைய தலைமுறையினருக்கு இருக்கும் பிரச்சனை முடி உதிர்வு தான். இதில் இருந்து மீண்டு வர இயற்கையான ஒரு தைலத்தினை வீட்டிலேயே தயாரித்து அதனை தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் இந்த முடி உதிர்வு பிரச்சனை தீர்ந்து விடும்.

முடி உதிர்வு தொல்லை

இன்று பலருக்கும் உள்ள மிக பெரிய பிரச்சனை என்றால் அது முடி உதிர்தல் பிரச்சனை தான். இதன் காரணமாக அனைவரும் தேர்ந்தெடுப்பது கெமிக்கல்கள் அதிகம் உள்ள எண்ணெய் மற்றும் ஷாம்புக்களை தான். முதலில் நல்ல பலனை தந்தாலும் பின்பு மொத்தமாக பல எதிர்வினைகளை ஏற்படுத்தி விடும். இதில் இருந்து மீண்டு வர வீட்டிலேயே ஒரு ஈஸியான முறையில் ஒரு தைலத்தினை தயாரிக்கலாம்.

ENEWZ WHATSAPP GROUP இல் சேர கிளிக் பண்ணுங்க!!

இந்த தைலம் தயாரிக்க தேவையான பொருட்கள் கரிசலாங்கண்ணி, நெல்லிக்காய் மற்றும் கருவேப்பிலை. கரிசலாங்கண்ணி அதிகமாக இருப்பது போல பார்த்து கொள்ளுங்கள். அதில் பாதி பங்காக நெல்லிக்காய் மற்றும் கருவேப்பில்லை இருக்க வேண்டும். அனைத்து பொருட்களையும் முதலில் நன்றாக கழுவி விட்டு பின்பு அதனை ஒன்றாக மிக்ஸியில் போட்டு அரைத்து கொள்ளவும். தண்ணீர் பயன்படுத்தாமல் அரைத்து வைத்து கொள்ளவும்.

சென்னை இன்றைய தங்க விலை நிலவரம்!!

பின், ஒரு இரும்பு சட்டியில் நல்லெண்ணெய் ஊற்றி அது சுடரியதும் அதில் நாம் அரைத்து வைத்துள்ள கலவையினை சேர்த்து கிண்டி விட வேண்டும். இதனை மிதமான சூட்டில் வைத்து கொதிக்க வைக்க வேண்டும். நன்றாக கொதித்ததும் இதனை வடிகட்டி பயன்படுத்தலாம். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் முடி உதிர்வு பிரச்சனையில் இருந்து மீண்டு வரலாம். அதே போல் இள நரையினையும் தடுத்து விடலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here