முடி உதிர்வு பிரச்சனைகளை தவிர்க்க நாம் கடைகளில் கிடைக்கும் கெமிக்கல் பொருட்களை வாங்கி உபயோக்கிறோம். இதனால் அதற்கு நிரந்தர தீர்வு கிடைப்பதில்லை. இதனால் மேலும் முடி கொட்டுதல் தான் அதிகரிக்கும். இப்பொழுது இயற்கையான முறையில் முடி கொட்டுதலை கட்டுப்படுத்த என்ன செய்யலாம் என்பதை பார்ப்போம்.
முடி உதிர்தலை குறைக்க??
நமது உடலில் இரும்பு சத்துக்கள் குறைபாட்டால் தான் முடி உதிர்வு பிரச்சனைகள் அதிகம் ஏற்படுகிறது. இதனை தடுக்க நாம் தலைமுடியை பராமரிப்பது அவசியமாகும். மேலும் தினமும் சிறிது கருவேப்பிலை சாப்பிட்டு வந்தால் முடி உதிர்வதை தவிர்க்கலாம்.மேலும் தலைக்கு எண்ணெய் தேய்த்து வறட்சி இல்லாமல் பார்த்துக் கொண்டால் கட்டாயம் முடி கொட்டுவதை கட்டுப்படுத்தலாம்.
தேவையான பொருட்கள்:
வெந்தயம்
கருஞ்சீரகம்
எலுமிச்சை சாறு
வழிமுறைகள்:
ஒரு சிறிய பாத்திரத்தில் வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை எடுத்துக் கொள்ளவும். அதில் சிறிது தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்து கொதிக்க விடவும். தண்ணீர் பாதி வரைக்கும் வற்றி வர வேண்டும். இப்பொழுது அந்த தண்ணீரை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்.
அந்த வெந்தயம் மற்றும் கருஞ்சீரகத்தை அரைத்து தலையில் தேய்த்துக் கொள்ளலாம். இதனால் பொடுகு, பேன் போன்றவை நீங்கும். இப்பொழுது இந்த நீரை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி இதனை தலை முடியில் வேர் வரை தடவ வேண்டும். 30 நிமிடம் கழித்து ஷாம்பூ அல்லது சிகைக்காய் போட்டு குளித்தால் முடி உதிர்வு பிரச்சனையை முழுவதுமாக தவிர்க்கலாம்.
வழக்க தலையில் முடி வளர எதாவது சொல்லுங்கள்