உலகில் மர்மமான சம்பவங்கள் ஆங்காங்கே அரங்கேறி கொண்டு தான் இருக்கிறது. அந்த வகையில் ராணிப்பேட்டை மாவட்டத்தில் முதலிரவுக்கு சென்ற தம்பதிக்கு நடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதாவது, ஓச்சேரி பகுதியை சேர்ந்த சரவணன் என்பவர் ஸ்வேதா என்ற பெண்ணை காதலித்து கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை திருமணம் செய்து கொண்டார். திருமணம் முடிந்த கையோடு பொண்ணு வீட்டுக்கு அழைத்து சென்றுள்ளனர்.
Enewz Tamil WhatsApp Channel
அங்கு அவர்களுக்கு முதல் இரவு நடந்துள்ளது. மறுநாள் காலை தூங்கிக்கொண்டிருந்த ஸ்வேதா எழுந்து பார்த்தபோது, புது மாப்பிள்ளை சரவணன் தூக்கில் தொங்கிக் கொண்டிருந்தார். இதை பார்த்து அலறிய ஸ்வேதா போலீசாருக்கு தகவல் அளித்தார். காவல்துறை விரைந்து வந்து அவரது சடலத்தை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் முதலிரவில் என்ன நடந்தது, எதற்காக தூக்கு போட்டுக் கொண்டார் என்று போலீஸ் விசாரணை செய்து வருகிறார்கள்.