மக்களே.., நாளைக்கு குடையை மறந்துறாதீங்க.., 9 மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை – வானிலை மையம் தகவல்!!

0
மக்களே.., நாளைக்கு குடையை மறந்துறாதீங்க.., 9 மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை - வானிலை மையம் தகவல்!!
மக்களே.., நாளைக்கு குடையை மறந்துறாதீங்க.., 9 மாவட்டங்களில் கொட்டி தீர்க்க போகும் கனமழை - வானிலை மையம் தகவல்!!

தமிழகத்தில் கடந்த சில வாரங்களாகவே மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது.. குறிப்பாக பகல் நேரத்தில் வெப்பத்தின் தாக்கம் அதிகமாக இருப்பதும் மாலை நேரத்தில் திடீரென மழை பெய்தும் வருகிறது. இந்நிலையில் நாளை மழைபெய்ய இருக்கும் மாவட்டங்கள் குறித்து சென்னை வானிலை மையம் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

Enewz Tamil WhatsApp Channel 

இது தொடர்பாக வெளியான அறிக்கையில் கூறியிருப்பதாவது, மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, நாளை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். மேலும் சென்னை, மதுரை, நீலகிரி, கோவை, தேனி, சேலம், தருமபுரி, திண்டுக்கல் மற்றும் கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் நாளை கனமழை வெளுத்து வாங்கும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அரசு ஊழியர்களே., இந்த பண்டிகைக்கு முன்னதாக பெரிய பரிசு இருக்கு? ஜாக்பாட் தகவல்!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here