அனைத்து கிராமசபை கூட்டங்களும் ரத்து – தமிழக அரசு அறிவிப்பு!!

0

தமிழகத்தில் நாளை குடியரசு தினத்தன்று நடைபெறவிருந்த அனைத்து கிராம சபை கூட்டங்களும் கொரோனா தொற்று காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு அறிவித்துள்ளது.

கிராமசபை கூட்டங்கள் ரத்து

ஒவ்வொரு வருடமும் மகாத்மா காந்தி பிறந்ததினம், சுதந்திர தினம், குடியரசு தினம் ஆகிய முக்கியமான நாட்களில் மாநிலம் முழுவதும் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். அதே போல இந்த வருடமும் கூட்டங்கள் நடக்குமா இல்லையா என்று எதிர்பார்த்த நிலையில் தற்போது அனைத்து கிராமசபை கூட்டங்களும் ரத்து செய்யப்படுகின்றன என தமிழக அரசு அறிவித்துள்ளது.

ராஜமௌலியின் பிரம்மாண்ட திரைப்படம் – ‘ஆர்ஆர்ஆர்’ அக்டோபர் 13ல் ரிலீஸ்!!

தேர்தல் நடக்கப்போகும் நேரத்தில் மக்களின் எதிர்ப்பை சமாளிக்க முடியாதவண்ணம் கிராமசபை கூட்டங்களை அரசு தவிர்த்து வருகிறது என திமுக சார்பிலும் மக்கள் நீதி மையம் சார்பிலும் வழக்குகள் தொடரப்பட்டது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் காந்தி பிறந்தநாளை ஒட்டி கிராமசபை கூட்டம் நடைபெறாத நிலையில் தற்போது நாளை நடக்கவிருந்த கூட்டங்களும் ரத்து செய்யப்பட்டது.

இது குறித்து தமிழக அரசு கொடுத்த அறிக்கையில், ‘ கொரோனா தொற்று காரணமாக நாளை நடக்கவிருந்த அனைத்து கிராமசபை கூட்டங்களும் ரத்து செய்யப்படுகிறது. இயைத்து தொடர்பாக சென்னை தவிர பிற மாவட்ட ஆட்சியருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது’ என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here