வீட்டில் சுலபமாக கிடைக்கும் பொருட்களை வைத்தே நமது சருமத்தில் ஏற்படும் பிரச்சனைகளை சரி செய்துகொள்ளலாம். ஆனால் எளிதில் கிடைப்பதால் என்னவோ அதன் அருமை நமக்கு புரிவதில்லை. இப்பொழுது கடலை மாவு நமது முகத்திற்கு எந்த அளவிற்கு நன்மைகளை சேர்க்கிறது என பார்க்கலாம்.
கடலை மாவு
நாம் சருமத்திற்கு பல கெமிக்கல் அழகு சாதனங்களை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சனைகளை பற்றி அறியாமல் அதனை பயன்படுத்தி வருகிறோம். நாளடைவில் இந்த கெமிக்கல்களால் முகத்தில் சுருக்கம் விழுகிறது. மேலும் இந்த அழகு சாதனங்கள் முகத்தில் உள்ள மெலனின் அளவை குறைகிறது. இதனால் அப்போதைக்கு மட்டுமே அழகு தருமே அன்றி நிரந்தர முகப்பொலிவை தருவதில்லை.
அனைத்து கடைகளிலும் கிடைக்கும் எளிதாக கிடைக்க கூடிய பொருளான கடலை மாவை நாம் அதிகம் பயன்படுத்துவதே இல்லை. நாம் ஒரு பொருளை சரும அழகிற்கு பயன்படுத்தும் போது அதனை தொடர்ச்சியாக பயன்படுத்த வேண்டும். அப்பொழுது தான் அதன் முழு பலன் கிடைக்கும்.
- கடலை மாவுடன் சிறிது மஞ்சள் சேர்த்து கலந்து முகத்தில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும். இவ்வாறு செய்தால் முகத்தில் பருக்களால் ஏற்படும் தழும்புகள் முழுமையாக மறையும்.
- கடலை மாவு, முல்தானி மெட்டி , பாதாம் எண்ணெய் சேர்த்து கலந்து முகம் மற்றும் கழுத்தில் தடவி வந்தால் ஆங்காகே இருக்கும் கருமை நீங்கும்.
- கடலைமாவு, எலுமிச்சை சாறு, பப்பாளி போன்றவற்றை கலந்து முகம் கை, கால்களில் தடவி வந்தால் சரும பொலிவு அதிகரிக்கும். இவ்வாறு கடலைமாவை தினமும் சருமத்தில் பயன்படுத்தி வந்தால் மேக்கப் போட தேவையே இருக்காது.