அரசு ஊழியர்களுக்கு ஷாக்., வரும் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை இல்லை., அறிவிப்பை வெளியிட்ட மணிப்பூர்!!!

0
அரசு ஊழியர்களுக்கு ஷாக்., வரும் சனி மற்றும் ஞாயிறு விடுமுறை இல்லை., அறிவிப்பை வெளியிட்ட மணிப்பூர்!!!

நடப்பு 2023-24 ஆம் நிதியாண்டு வருகிற மார்ச் 31ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை முடிவடைய இருப்பதால் பல்வேறு பணிகளும் பாதிக்கப்படும் என பலரும் கவலை தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் அனைத்து வங்கிகளும் மார்ச் 31ஆம் தேதி வழக்கம் போல் செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து மணிப்பூர் மாநில அரசு முக்கிய உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதாவது மணிப்பூர் மாநில அரசின் கீழ் உள்ள பொதுத்துறை நிறுவனங்கள், தன்னாட்சி நிறுவனங்கள்உட்பட அனைத்து அரசு அலுவலகங்களும், 2024 மார்ச் 30 (சனிக்கிழமை) மற்றும் 31 (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 தினங்களுமே வேலை நாட்களாக கருதப்படும் என அறிவித்துள்ளனர். இந்த அறிவிப்பு அரசு ஊழியர்களிக்கு அதிர்ச்சியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 Enewz Tamil டெலிக்ராம்

மதுரை சித்திரை திருவிழா.., பிரசாதம் வழங்க இது தான் கட்டுப்பாடு.., வெளியான அதிரடி உத்தரவு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here