மதுரை சித்திரை திருவிழா.., பிரசாதம் வழங்க இது தான் கட்டுப்பாடு.., வெளியான அதிரடி உத்தரவு!!!

0
மதுரை சித்திரை திருவிழா.., பிரசாதம் வழங்க இது தான் கட்டுப்பாடு.., வெளியான அதிரடி உத்தரவு!!!
உலகப் புகழ் பெற்ற சித்திரை திருவிழா வரும் ஏப்ரல் 12ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்க உள்ளது. இதை தொடர்ந்து மீனாட்சி திருக்கல்யாணம் ஏப்ரல் 21 ஆம் தேதியும், கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கும் நிகழ்வு ஏப்ரல் 23ஆம் தேதியும் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த சித்திரை திருவிழாவின் போது பலரும் நேர்த்தி கடன்களை செலுத்தும் வகையில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்குவது வழக்கம்.
இந்நிலையில் இந்த ஆண்டு அன்னதானம் வழங்க புது கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதாவது பக்தர்களுக்கு வழங்கப்படும் பிரசாதம், உணவுகள், குளிர்பானங்கள் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருக்க வேண்டும். இதனால் அன்னதான வழங்க நினைக்கும் நபர் உணவு பாதுகாப்பு துறையிடம் சான்றிதழ் பெற்று அன்னதானம் வழங்க வேண்டும் என தெரிவித்துள்ளனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here