நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 19ஆம் தேதி துவங்கி ஜூன் 1ம் தேதி வரை 7 கட்டங்களாக நடைபெற உள்ளது. அதன்படி தமிழகத்தில் முதல் கட்டமாக ஏப்ரல் 19ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதைத்தொடர்ந்து ஏப்ரல் 26 ஆம் தேதி கர்நாடகா, கேரளா, அசாம், பீகார் உள்ளிட்ட 11 மாநிலங்களில் 2ம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதனால் இப்போது கேரள மாநிலத்தில் வரும் ஏப்ரல் 26 ஆம் தேதி அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், தனியார் நிறுவனங்கள் மற்றும் வணிக மையங்களுக்கும் முழு விடுமுறை அளிக்க உத்தரவிட்டுள்ளனர். மேலும் இந்த விடுமுறையை காரணம் காட்டி ஊழியர்களின் ஊதியத்தை குறைக்க கூடாது எனவும் உத்தரவிட்டுள்ளனர்.