நாடு முழுவதும் 7 வது ஊதியக்குழுவின் கீழ் பணிபுரியும் அரசு ஊழியர்களுக்கு ஆண்டுக்கு இருமுறை அகவிலைப்படி உயர்த்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி (DA) 42 சதவீதத்திலிருந்து 46 சதவீதமாக உயர்த்தப்படலாம் என AICPI குறியீடு அடிப்படையில் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் தீபாவளி பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலம் தான் இருப்பதால், போனஸ் குறித்த எதிர்பார்ப்புகள் ஊழியர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
Enewz Tamil WhatsApp Channel
இந்த இரண்டு நற்செய்திகளின் அதிகாரபூர்வ அறிவிப்பும் விரைவில் வெளியிடப்பட உள்ளதால், நடப்பாண்டு தீபாவளி பண்டிகையில் போனஸ், DA உயர்வு, DA நிலுவை தொகை என பெரிய அளவில் ஊதியத்தை அரசு ஊழியர்கள் பெற வாய்ப்புள்ளது. குறிப்பாக தமிழகத்தில் அரசு போக்குவரத்து கழகம், ஆவின், டாஸ்மாக், கூட்டுறவு சர்க்கரை ஆலை, மின்சார வாரியம் போன்ற பொதுத்துறை நிறுவன தொழிலாளர்களுக்கு ஆண்டுதோறும் போனஸ் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பண்டிகையில் பட்டாசு வெடிக்க தடை கோரிய வழக்கு., சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு!!!