நாடு முழுவதும் தீபாவளி பண்டிகையை சிறப்பிக்கும் விதமாக பலரும் பட்டாசு வெடித்து கொண்டாடி மகிழ்கின்றனர். இந்த பட்டாசுகளில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்கும் படி வேதிப்பொருட்கள் கலக்கப்படுவதால், “பேரியம் மற்றும் சரவெடி பட்டாசுக்களுக்கு தடை விதித்ததோடு, பட்டாசு வெடிப்பதற்கான நேர கட்டுப்பாட்டையும் சுப்ரீம் கோர்ட் உத்தரவில் தெரிவித்தது. இந்த நிலையில் பசுமை பட்டாசு உற்பத்திக்கு ஒப்புதல் மற்றும் நேர கட்டுப்பாட்டை தளர்த்தவும் உற்பத்தியாளர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
Enewz Tamil WhatsApp Channel
இந்த வழக்கை இன்று (செப்டம்பர் 22) விசாரித்த நீதிபதிகள், “சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத பசுமை பட்டாசுகளை தயாரிக்கலாம். ஆனால் பேரியம் மற்றும் சரவெடி மீதான தடை தொடரும். அதோடு பண்டிகை காலங்களில் காலை 6 முதல் 7 மணி வரை மற்றும் மாலை 7 மணி முதல் 8 வரை என 2 நேரம் மட்டுமே பட்டாசு வெடிக்க அனுமதி.” எனக்கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
மகளிர் உரிமை தொகை பெறுவதில் மீண்டும் சிக்கல்?? தமிழக அரசு எடுக்க போகும் அடுத்த நடவடிக்கை தான் என்ன??