கொரோனா வைரஸ் பரவலை விட அதை பற்றிய வதந்திகளே அதிகம் பரவி வருகின்றன. மேலும் இந்த சமூக வலைத்தளங்களில் கொரோனா விளைவை பற்றிய ஆதாரமற்ற விடியோக்கள் அதிகம் பரவுகின்றன. அதனால் சமூக வலைத்தளங்களுக்கு கட்டுப்பாடு கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது.
சமூக வலைத்தளங்கள் கட்டுப்பாடு
கொரோனா வைரஸை தடுக்க அரசு பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு தான் இருக்கிறது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்திருந்தது. மேலும் பள்ளி தேர்வுகளை ஒத்தி வைத்திருந்தது. இப்படி இருக்க சமூக வலைத்தளங்களில் பல பொய்யான வதந்திகளை பரப்பி வருகின்றனர். இதனால் மக்கள் பீதியுடன் காணப்படுகின்றன.
கொரோனாவால் கல்லாகட்டும் இணையதளங்கள்..! உஷாரா இருந்துக்கோங்க மக்களே..!
மேலும் கொரோனவால் சிக்கன் மற்றும் முட்டைகளை சாப்பிட கூடாது என்றும் அதனை எப்படி சோதனைகள் செய்வது என்றும் ஆதாரமற்ற விடியோவை பரப்பி வருகின்றனர். இதனால் மக்கள் குழப்ப நிலையை அடைந்துள்ளனர். இப்படி வதந்திகளை பரப்புவதால் எதை நம்புவது என்ற பயத்திலும் காணப்படுகின்றனர்.
மேலும் இது போன்ற செயல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் பேஸ்புக், வாட்ஸாப், ஷேர்சாட், டிக் டாக் போன்ற சமூக வலைத்தளங்களின் பயன்பாட்டுக்கு கட்டுப்பாடு விதிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை அரசு விரைவில் வெளியிடும்.
To Subscribe Youtube Channel | Click Here |
To Join WhatsApp Group | Click Here |
To Join Telegram Channel | Click Here |