அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்கள் தனியார் பள்ளியில் படிக்கும் மாணவர்களை போன்று அனைத்திலும் கைதேர்ந்தவர்களாக இருக்க அந்தந்த மாநில அரசு பல்வேறு திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறது. இது தவிர மாணவர்களுக்கு பல்வேறு சலுகைகளையும் இலவசமாக வழங்கி வருகின்றனர். இதனால் ஆண்டு தோறும் தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை காட்டிலும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை அதிகமாக உள்ளது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த நிலையில் மகாராஷ்டிரா மாநிலத்தில் அரசு பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு சில சலுகைகளை அறிவித்துள்ளனர். இந்த மாநிலத்தில் அரசு பள்ளியில் படிப்போருக்கு இனி வரும் நாட்களில் ஒரு செட் யூனிபார்ம், ஒரு செட் ஷூ, 2 செட் சாக்ஸ் வழங்கப்படும் என தெரிவித்துள்ளனர் .இது குறித்து மகாராஷ்டிரா பள்ளி முதல்வர் சங்கத்தின் செய்தி தொடர்பாளர் மகேந்திர கான்புலே கூறியதாவது மாணவர்களுக்கு சீருடை வழங்குவது குறித்து கடந்த ஏப்ரல் மாதமே முடிவு செய்யப்பட்டது.
இதற்காக ரூபாய் 82.92 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒரு மாணவருக்கு ஒரு செட் யூனிபார்ம் 600 ரூபாயாகவும், ஒரு செட் ஷூ, சாக்ஸ் 170 ரூபாயும் கணக்கிடப்பட்டுள்ளது. மாணவர்களுக்கு வழங்கும் இந்த சீருடை நல்ல தரமுடையதாக வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.