இன்றைய காலகட்டத்தில் பலரும் பணம் சம்பாதித்து, நல்ல நிலையில் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் கொஞ்சம் கூட ஓய்வு என்பதையே மறந்து 24 மணி நேரமும் தங்களது குடும்பத்துக்காக உழைக்கின்றனர். இப்படி ஒருவர் தொடர்ந்து உழைக்கும் போது அவர் உடலளவிலும், மனதளவிலும் பாதிப்படைகின்றனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்நிலையில் ஊழியர்களின் நலன் கருதி பிரபல நிறுவனம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தி பலரின் பாராட்டையும் பெற்றுள்ளது. அதாவது கலிபோர்னியாவில் உள்ள மென்பொருள் மேம்பாட்டு நிறுவனம் தங்களது ஊழியர்களுக்கு 9 நாட்கள் ஊதியத்துடன் கூடிய விடுமுறையை வழங்கியுள்ளது.
ரேஷன் கார்டு உங்ககிட்ட இருக்கா.., அப்ப உடனே இத பண்ணிருங்க.., வெளியான முக்கிய அறிவிப்பு!!
இந்த செய்தியை LinkedIn பயனர் ஷைலேந்திர பாண்டே அந்த நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தியை சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மென்பொருள் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஊழியர்களின் நலனில் அக்கறை கொண்டு ஜூலை 1 – 9 ஆம் தேதி ஓய்வு எடுப்பதற்காக விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் வேலைக்கு வந்தவுடன் தகவல் தொடர்பு துறைக்கான அனைத்து பணிகளும் தொடங்கப்படும் என அந்த பதிவில் தெரிவித்துள்ளனர்.