அரசு ஊழியர்களே…, அகவிலைப்படி உயர்வு 4% இல்லை…, வெளியான முக்கிய தகவல்!!
அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு 7வது ஊதியக்குழு பரிந்துரையின் கீழ் ஆண்டுக்கு இரு முறை ஜனவரி மற்றும் ஜூலை மாதங்களில் அகவிலைப்படியை மத்திய அரசானது உயர்த்தி வருகிறது. நடப்பு வருடத்தில் ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படியை 42%-திலிருந்து 4% அதிகரித்து 46%-மாக உயர்த்தி மத்திய அரசு கடந்த மாதம் அறிவித்தது.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு, ராஜஸ்தான், ஒடிசா உள்ளிட்ட மாநில அரசுகளும் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படியை உயர்த்தி அறிவித்தது. இந்நிலையில், அகவிலைப்படியை கணக்கிடும் AICPI குறியீட்டு வெளியாகி உள்ளது. இந்த குறியீட்டின் படி, தற்போதைய தரவு 48.54 சதவீதத்தை 137.5 புள்ளிகள் வரை எட்டியுள்ளது. இதனால், வரும் ஜனவரி மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு 4 முதல் 5 சதவீதம் வரை உயர அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.