அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் அனைவரும் தற்போது ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வை எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், அகவிலைப் படியை கணக்கிடும் AICPI குறியீட்டு தரவை அரசு வெளியிட்டுள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் வரையிலான இந்த AICPI குறியீடானது 139.7 ஆக அதிகரித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதன் மூலம், அரசு ஊழியர்களுக்கு வழங்க வேண்டிய ஜூலை மாதத்திற்கான அகவிலைப்படி ஆனது 4% அதிகரித்து 42%-திலிருந்து 46% ஆக உயர அதிக வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகிறது. இதை போல AICPI குறியீடு தொடர்ந்து அதிகரித்து வந்தால் அடுத்த ஜனவரி (2024) மாதத்திற்கான அகவிலைப்படி உயர்வு 50% வரை உயரக்கூடும். இது குறித்த அதிகாரப்பூர்வ தகவலை மத்திய அரசானது இம்மாத (செப்டம்பர்) இறுதிக்குள் அறிவிப்புக்கு என பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது. அகவிலைப்படி உடன் (DA) இணைந்து ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலை நிவாரணம் (DR) குறித்த அறிவிப்பையும் அரசு வெளியிட திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழக மக்களே உஷாரா இருங்க…, இந்த மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கப்போகுது!!