தொடர்ந்து மாறி வரும் பருவநிலையால், நாடு முழுவதும் உள்ள பல்வேறு மாநிலங்களில் மழை வெளுத்து வாங்கிறது. இந்த வகையில், இன்றைய வானிலை நிலவரப்படி தென்னிந்திய பகுதிகளில் கனமழைக்கு அதிக வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன்படி, தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் உள்ள ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதில் குறிப்பாக,வேலூர், கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், இராணிப்பேட்டை, திருவண்ணாமலை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய அதிக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இன்று முதல் அடுத்த 3 நாட்களுக்கு கர்நாடகாவிலும், அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவிலும் கனமழை பெய்ய கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
பெற்றோரின் பரம்பரை சொத்தில் இந்த குழந்தைகளுக்கும் பங்கு உண்டு., உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு!!!