மீண்டும் உயர்ந்த தங்கத்தின் விலை – பொதுமக்கள் அதிர்ச்சி!!

0
Gold
Gold

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கத்தின் விலை குறைந்து வந்த நிலையில் இன்று மீண்டும் அதிகரித்து உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். இதனால் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.

இன்றைய விலை:

மனித வரலாற்றில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி உள்ள கொரோனா வைரஸ், பொருளாதாரத்தையும் புரட்டிப் போட்டுள்ளது. இதனால் தொழிற்சாலைகள் மூடப்பட்டு போதிய வருமானம் இன்றி சாமானிய மக்கள் மிகுந்த கஷ்டத்தில் உள்ளனர். மறுபுறம் நகை வாங்குவதற்காக சிறுகச்சிறுக பணம் சேர்த்து வைத்திருந்த மக்கள் அதன் விலை ஏற்றத்தைப் பார்த்து, தங்க நகை வாங்குவது என்பது கனவாகவே போய்விடும் என புலம்புகின்றனர். அந்த அளவிற்கு ஊரடங்கு காலத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து உள்ளது.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் இணைய கிளிக் பண்ணுங்க!!

gold jewels
gold jewels

இதற்கு அதன் மீதான முதலீடுகள் அதிகரித்ததே காரணம் ஆகும். ஏனென்றால் இந்தியாவில் ஆபரணப் பொருளாக பார்க்கப்படும் தங்கம், மற்ற நாடுகளில் முதலீடு செய்யும் பொருளாகவே பார்க்கப்படுகிறது. இதன் விளைவாக சர்வேதச சந்தையில் ஏற்படும் விலை மாற்றம் இந்திய சந்தையிலும் எதிரொலிக்கிறது. இந்த கொரோனா ஊரடங்கு காலத்தில் அதிகபட்சமாக ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 43 ஆயிரத்தை தாண்டியது.

முன்னாள் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி உயிரிழப்பு?? வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி!!

இந்நிலையில் கடந்த 4 நாட்களாக தொடர்ந்து விலை குறைந்து கொண்டே வந்தது. இதனால் சவரன் 41 ஆயிரத்திற்கும் கீழ் வந்தது. இன்று சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கத்தின் (22 காரட்) விலை 8 ரூபாய் அதிகரித்து ரூ. 5,105 க்கும், ஒரு சவரன் ரூ. 64 உயர்ந்து 40,840 ரூபாய்க்கும் விற்பனை ஆகிறது. வெள்ளியின் விலை ஒரு கிராம் 76.10 ரூபாயாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here