தமிழகத்தில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவு உயர்ந்து உள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
இன்றைய விலை:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு காரணமாக பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவு காரணமாக நகைக்கடைகள் பூட்டப்பட்டு வியாபாரம் நடைபெறாமல் இருந்தது. இருப்பினும் தங்கத்தின் மீது முதலீடு அதிகரித்த காரணத்தால் அதன் விலை உயர்ந்து கொண்டே சென்றது. தற்போது நகைக்கடைகள் திறக்கப்பட்டு வியாபாரம் தொடங்கி உள்ளது. இதனால் அதன் தேவை அதிகரித்து உள்ளதால், விலையும் தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்நிலையில் வரலாறு காணாத அளவிற்கு ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து உள்ளது.
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
உடுமலை சங்கர் ஆணவக்கொலை – கவுசல்யாவின் தந்தை விடுவிப்பு!!
சென்னையில் இன்று ஒரு கிராம் ஆபரணத் தங்கம் (22 காரட்) 4,629 ரூபாய்க்கும், ஒரு சவரன் 37,302 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது சுப நிகழ்ச்சிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டு நகை வியாபாரம் அதிகரித்து உள்ள வேளையில் விலை உயர்ந்து கொண்டே செல்வது மிகுந்த கவலை அளிப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.