தமிழகத்தில் இன்று காலையில் சவரனுக்கு 64 ரூபாய் அதிகரித்து இருந்த தங்கத்தின் விலை மாலையில் குறைந்து உள்ளது பொதுமக்களை சற்று நிம்மதி அடைய வைத்துள்ளது. இதனால் தங்க விலை மேலும் குறையுமா என்கிற எண்ணத்துடன் சுப நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் காத்திருக்கின்றனர்.
இன்றைய நிலவரம்:
தமிழகத்தில் கடந்த 4 நாட்களில் தொடர்ச்சியாக தங்கத்தின் விலை குறைந்து கொண்டே சென்றது. இதனால் வரலாறு காணாத அளவிற்கு சவரன் 43 ஆயிரத்தை தாண்டி விற்பனையான தங்கம் மீண்டும் 41 ஆயிரத்திற்கு கீழ் சென்றது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். ஊரடங்கு காலத்தில் அதன் மீது முதலீடுகள் அதிகரித்த காரணத்தால் விலை மேலும் அதிகரிக்கும் என்றே நிபுணர்கள் கூறினர்.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
அதைப்போன்றே இன்று காலை சவரன் 64 ரூபாய் அதிகரித்து ஆபரணத் தங்கத்தின் விலை பொதுமக்களுக்கு அதிர்ச்சி அளித்தது. தற்போது ஆறுதல் அளிக்கும் விதமாக மீண்டும் விலை குறைந்து உள்ளது சற்று மகிழ்ச்சி அளிப்பதாக உள்ளது.
88 லட்சம் பேருக்கு இலவச மளிகைப் பொருட்கள் – மாநில முதல்வர் அறிவிப்பு!!
சென்னையில் ஒரு கிராம் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை 29 ரூபாய் குறைந்து ரூ. 5,079 க்கும், ஒரு சவரன் ரூ. 225 குறைந்து ரூ.40,608 க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் வெள்ளியின் விலை 30 காசுகள் உயர்ந்து ரூ.76.40 க்கு விற்பனை ஆகிறது.