88 லட்சம் பேருக்கு இலவச மளிகைப் பொருட்கள் – மாநில முதல்வர் அறிவிப்பு!!

0

கேரளாவில் ஓணம் பண்டிகையை ஒட்டி 88 லட்சம் ரேஷன் அட்டைதாரர்களுக்கு இலவச மளிகைப் பொருட்கள் கொண்ட ‘ஓணம் கிட்’ வழங்கப்படும் என முதல்வர் பினராயி விஜயன் அறிவித்து உள்ளார்.

ஓணம் பண்டிகை:

கேரள அரசு வழங்க உள்ள ஓணம் கிட் இல் 11 வகையான பொருட்கள் இருக்கும். ஆகஸ்ட் 13, 14 மற்றும் 16 ஆகிய தேதிகளில் ஆண்டியோடயா பிரிவைச் சேர்ந்த 5.95 லட்சம் அட்டை வைத்திருப்பவர்களுக்கு முதலில் கிட் வழங்கப்படும். அடுத்த சுற்றில் 31 லட்சம் முன்னுரிமை அட்டை வைத்திருப்பவர்கள் ஆகஸ்ட் 19, 20, 21 மற்றும் 22 ஆகிய தேதிகளில் அவற்றைப் பெறுவார்கள்.

ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!

அனைத்து செவ்வாய் கிழமைகளிலும் முழு ஊரடங்கு – மாநில அரசு உத்தரவு!!

மீதமுள்ள சுமார் 51 லட்சம் அட்டை வைத்திருப்பவர்கள் ஓணத்திற்கு முன் பொருட்களை பெறுவார்கள். ஜூலை மாதத்தில் நுகர்வோர் தங்கள் ரேஷன் பொருட்களைப் பெற்ற அதே கடைகளிலிருந்தே கிட் பெற்றுக் கொள்ளலாம். தற்போது, தொண்டர்களின் உதவியுடன் 2,000 பேக்கிங் மையங்களில் கிட்கள் தயாரிக்கப்படுகின்றன. மேலும், ஆகஸ்ட் 21 முதல் 10 நாட்களுக்கு அனைத்து மாவட்டங்களிலும் ஓணம் சந்தைகளை அரசு நடத்தும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here