காஸாவில் நடைபெறும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம்., தீர்மானத்திற்கு இந்தியா ஆதரவு!!!

0

கடந்த 2 மாதமாக இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினரிடையே போர் நிலவி வருவதால், காஸா பகுதியில் உள்ள பொதுமக்கள் கிட்டத்தட்ட 20,000 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனால் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஐ.நா. சபை தீர்மானம் நிறைவேற்றியது. இதற்கு அமெரிக்கா வீட்டோ அதிகாரத்தை பயன்படுத்தி முறியடித்தது. இந்த நிலையில் காசா பகுதியில் நடைபெறும் போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என ஐ.நா. மன்றத்தில் எகிப்து தீர்மானம் கொண்டு வந்துள்ளது.

இதற்கு இந்தியா உட்பட 153 நாடுகளின் ஆதரவு தெரிவித்ததால் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் போர் நிறுத்தத்தை வலியுறுத்தி ஜோர்டான் நாடு கொண்டு வந்த தீர்மானத்தில் இந்தியா வெளிநடப்பு செய்தது குறிப்பிடத்தக்கது.

Enewz Tamil WhatsApp Channel 

தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்கள் கவனத்திற்கு.., இனி இந்த சலுகை உங்களுக்கும் உண்டு.., தமிழக அரசு அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here